ஃபயர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் (Fire OS) மூலம் இயங்கக்கூடிய புதிய 3D மொபைல்

அமெரிக்காவின் பிரபல ஆன்லைன் வர்த்தக தளமான அமேசான் தற்போது புதியதாக பல சிறப்பு அம்சங்களுடன் கூடிய அமேசான் ஃபயர் என்ற மொபைல் ஃபோன் ஒன்றை...

அரிசிலாற்றுக்குத் தென் கரையிலிருந்து பழையாறை நகரம்

அரிசிலாற்றுக்குத் தென் கரையில் நின்று அந்நகரைப் பார்ப்போம். அடடா! வெறும் நகரமா இது? தமிழ்த்தாயின் அழகிய நெற்றியில் தொங்கும் ஆபரணத்தைப் போல...

பழங்காலத்தில் வானத்தை துழாவிப் பார்க்கும் தொலைநோக்கிகள் இல்லை

பழங்காலத்தில் வானத்தை துழாவிப் பார்க்கும் தொலைநோக்கிகள் இல்லை. அந்த கிரகத்துக்கு நேரில் அவர்கள் சென்றதற்கான எந்த தடயமும் இல்லை...

ஈ-மெயில் முகவரி இல்லாமலேயே இந்தக் காலத்தில் இவ்வளவு முன்னேறிவிட்டீர்களா?

ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரையை துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தான். தரையை துடைத்துக் காட்டச் சொன்னார்கள். நன்றாகத் துடைத்தான்...

மிளகைத் தேடி இந்தியாவுக்கு கடல் வழியை கண்டுபிடித்தார்கள்

சூப் தயாரிப்பதற்கு மிளகு எங்கே கிடைக்கும் என்று தேடி நம் நாட்டிற்குள் வந்தவர்கள் தான் இந்தியாவையே 350 ஆண்டுகள் ஆண்ட கிழக்கிந்தியக் கம்பெனியினர்...

குட்டிச்சாத்தான் - அத்தியாயம் 1

அவுங்க வீட்டுக்கு பின்னாடி இருக்கிற தோட்டத்துல சாத்தன் ராத்திரியில‌ பாட்டு பாடி நடக்குமாம். அவுங்க பாரம்பரியமாவே சாத்தன சேவிக்கிற குடும்பம்...

Companion Plants For Tomato

We usually grow companion plants along with other vegetable plants to get more yield from the garden. These companion plants help in the growth of others by attracting beneficial insects which is used to pollinate and repels some insects to save plants...

Sunday, October 30, 2016

Companion Plants for Tomato

We usually grow companion plants along with other vegetable plants to get more yield from the garden. these companion plants help in the growth of others by attracting beneficial insects which is used to pollinate and repels some insects to save plants. I am not going much inside this vast topic but would like to list out some companion plants here to help the growth and get good yield of tomato.



1. Marigolds
Help producing root-knot causing nematodes, slugs, tomato worms etc., The best suggestive variety is french marigold.


2. Carrots
Carrots break up the soil and allows water, nutrients and air supply for the roots of the tomato plants.


3. Garlic
Plant garlic cloves around tomato plants to save them from the attacks of spider mites.


4. Peppers
They both are from the family solanaceae and have similar requirements. Planting them together will help you in fertilizing and pest prevention.


5. Celery
Loose root system of the plant and encourages growth of earth-works and soil microbes.


6. Onions
Because of the pungent odor they emit, onions are very good plant to keep away pest from your tomato plants.


7. Basil
Spider mites, aphids and horn-worms can be repelled easily by planting just 3 basil plants along each tomato plant. You can also plant pudhina/ mint if basil not available.


8. Borage
Borage, commonly known as known as a star-flower, actually help in overall health and taste of a tomato plant. They also repels tomato horn-worms and cabbage worms.


9. Parsley
These biennial herbs attracts hover flies that feast on many pests of tomato plant.


10. Chives
This pretty herb not only helps improve the taste of tomatoes but also helps repel aphids and makes a great addition to any tomato salad.

Monday, October 26, 2015

குட்டிசாத்தான் - அத்தியாயம் 1



1940 ம் வருடம் ஒரு செப்டம்பர் மாதத்தில்...
.
சுமதி திருச்சி இரயில் நிலையத்தில் ஐலேன்ட் எக்ஸ்பிரஸின் சாதா இருக்கை கம்பார்ட்மென்ட்டின் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்தாள்... அவளுடைய கணவன் ராம் வெளியே தண்ணீர் பிடிக்க போயிருக்க..  அருகில் அவளின் 8 வயது மகள் கையில் பொம்மையுடன் விளையாடிக்கொண்டிருந்தாள்.  இரயில் ஓரளவுக்கு காலியாகவே இருந்தது.
.
எதிர் இருக்கையில் ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க பெரியவர் வந்தமர்ந்தார். நரைத்த முடியுடன் நெற்றியில் நாமமிட்டிருந்தார்.. மூக்கு கண்ணாடியை கழட்டியவாறே கேட்டார்..
.
"உன் பேர் என்னம்மா கண்ணு.. "
.
"ஜெயா தாத்தா"
.
என்ன படிக்கிறீங்க‌
.
"மூணாவது.."
.
ராம் தலையை பிடித்தப்படியே கையில் தண்ணீர் பாட்டிலுடன் கேபினுக்குள் நுழைந்தார்..
.
என்னங்க ஆச்சு..
.
தண்ணி பிடிச்சுட்டு வரும் போது கால் ஸ்லிப் ஆயி சிமின்ட் பெஞ்ச்ல இடிச்சுக்கிட்டேன்.. நல்ல வேள கீழ விழல...
.
யாரோ ஒரு ரெயில்வே ஊழியர் அங்கு தொங்கவிட்டிருந்த தண்டவாள துண்டில் இரும்பு துண்டால் மூன்று முறை அடித்தார்..
.
இரயில் மெல்ல நகரத்துவங்கியது..
.
பெரியவர் மெல்ல ராமிடம் பேச்சு கொடுத்தார்..
.
" நான் ஈரோட்ல ஒரு கல்யாணத்துக்கு போறேன்.. நீங்க சார்.."
.
நாங்க திருச்சூர் போறோம்.. நண்பர் கல்யாணம்..
.
ஓஹோ..
.
திருச்சூர் நல்ல ஊர்.. பச்ச பசேல்ன்னு இருக்கும்.. நண்பர்ன்னா கூட வேல செய்றாரா..
.
இல்ல எங்க கடைக்கு அப்பளம் சப்ளை பண்றார்.. ரொம்ப நல்ல மனுசன்.. எங்க குழந்தை இன்னிக்கி உயிரோட இருக்குன்னா அவர் தான் காரணம்..
.
ஓ.. ஏன் என்னாச்சு பாப்பாக்கு..
.
ஒரு நாள் கொட்டுற மழையில எங்க வீட்டுக்கு ராத்திரி பதினோரு மணிக்கு வந்து உங்க குழந்தைய கூட்டிக்கிட்டு வெளியூர் எங்கயும் போகாதீங்கன்னு சொன்னாரு.. அடுத்த நாள் என் மக ஸ்கூல்ல கல்லணைக்கு பிக்னிக் போறதா இருந்துச்சு. அவளுக்கு அன்னைக்கு கீழ விழுந்து அடி பட்டிருந்தது.. நாங்களும் அணுப்பணுமா வேணாமான்னு தான் இருந்தோம்.. அவரு வந்து சொன்னது ரொம்ப அதிர்ச்சியாத்தான் இருந்தது.. நாங்க அனுப்பல... நிறைய பேருக்கிட்ட விசாரிச்சு ரொம்ப கஷ்ட்டப்பட்டு தான் வந்திருந்தாரு..
.
ஆனா அடுத்த நாள் ஸ்கூலோட மேட்டடோர் வேன் கவுந்து காவேரில விழுந்துடுச்சு. எட்டு குழந்தைங்க இறந்துடுச்சு.. பேப்பர்ல படிச்சிருப்பீங்களே..
.
ஆமா ஆமா நான் கூட படிச்சேன்.. நீங்க சொல்றது ரொம்ப ஆச்சரியமா இருக்கு.. அவரு என்ன ஜோஸ்யக்காரரா.. அப்பளக்காரா..
.
நாங்க கூட எப்படி சொன்னீங்கன்னு கேட்டோம்.. தோணுச்சுன்னு சொன்னாரு..
.
கருப்பு புகையை கக்கிக்கொண்டே கரூர் ஸ்டேஷனுக்குள் நுழைந்துகொண்டிருந்தது..
.
நீங்க வெளியெல்லாம் போகாதீங்க ஏற்கனவே சகுனம் சரியில்ல.. கரூர்ல கும்பல் ஏறினாலும் ஏறும்.. நானும் பாப்பாவும் படுத்துக்கறோம்.. இங்கயே இருங்க.. சுமதி எச்சரித்தாள்..
.
சுமதிக்கு பயணம் துவங்கும் போது இருந்த சந்தோஷம் இப்போது காணாமல் போய் ஒரு வித பதட்டம் தொற்றிக்கொண்டது..
.
திருச்சூர் இரெயில் நிலையம்.. அதிகாலை 3:50..
.
மிக சொற்பமானவர்களே ப்ளாட்பார்மில் தென்பட்டார்கள்.. போர்வை போர்த்தியபடி ஆங்காங்கே சிலர் உறங்கிக்கொண்டிருந்தார்கள்.. இரண்டே இரண்டு ப்ளாட்பார்மோடு திருச்சூர் இரெயில் நிலையம் பனி விழும் அதிகாலை நேரத்தில் ரம்மியமாக இருந்தது..
.
நீ இங்க உக்காரு.. நான் போய் விசாரிச்சுட்டு வரேன்..
.
ஸ்டேஷன் மாஸ்டர் ரூமை நோக்கி சென்றார் ராம்.
"குன்னங்குளத்துக்கு இங்கருந்து பஸ் இப்ப இருக்குமா.. "
.
ஸ்டேஷன் வாசல்ல ஒரு பஸ் நிக்கிது பாருங்க.. அது தான் போகும்.. ஆனா அஞ்சு மணிக்கு தான் கிளம்பும்..
பக்கத்துல கவர்மென்ட் பஸ் ஸ்டான்ட் இருக்கு அங்கருந்து எர்ணாங்குளத்துலருந்து வரும் பஸ் கிடைக்கும்.. ஒரு கிலோமீட்டர் தூரம் தான்..
.
தாங்ஸ்ங்க..
.
குழந்தை ஜெயா அம்மாவின் மடியில் தலை வைத்து சிமின்ட் பெஞ்சில் தூங்கிக்கொண்டிருந்தாள் ..
.
"சுமதி வாசல்ல இருக்கிற பஸ்லயே போயிரலாம்.. அது வரைக்கும் இங்கயே இருப்போம்.."
.
சற்று நேரத்தில் பஸ்ஸில் லைட் போட இவர்கள் பஸ்ஸில் சென்று இருக்கையில் அமர்ந்து கொண்டார்கள்..
.
பம்பாய் எக்ஸ்பிரஸ் வந்ததும் பஸ் நிரம்பியது..
.
குன்னங்குளம்.. 5:45
.
ஏங்க இப்ப அவரோட ஊருக்கு பஸ்ல போகணுமா..
.
இல்ல ஆட்டோல வரச்சொன்னார்... சொவ்வன்னூர் இங்கருந்து இரண்டு மூணு கிலோ மீட்டர் தான்னு சொன்னார்..
.
ஆட்டோவில் ஏறினார்கள்..
.
சார் சொவ்வன்னூர்ல எங்க..
.
சொவ்வன்னூர்ல கூத்தூர் வீடுன்னு சொன்னார்..
.
கூத்தூர் வீடா.. ஓ பாட்டுரும்பன் வீடா.. கல்யாணத்துக்கு போறீங்களா..
.
ஆமா.. உங்களுக்கு அவர தெரியுமா..
.
என்னங்க ஊருக்கே தெரியும்.. கூத்தூர்ங்கறது அவுங்க வீட்டுப்பேரு.. ஆனா பாட்டுரும்பன்னு சொல்லித்தான் அவுங்க குடும்பத்துல இருக்கிறவங்கள எல்லாரும் கூப்பிடுவாங்க..
.
ஏன் அப்படி கூப்புடுறாங்க..
.
அவுங்களோட வீட்டுக்கு பின்னாடி இருக்கிற தோட்டத்துல சாத்தன் ராத்திரியில‌ பாட்டு பாடி நடக்குமாம்.. அவுங்க பாரம்பரியமாவே சாத்தன சேவிக்கிற குடும்பம்..
.
சாத்தன்னா..
.
அதாங்க குட்டிச்சாத்தன்...

(தொடரும்) 
 -------------------------------------------------------------------------------------------
குறிப்பு:  இந்த கதை முகநூல் நண்பர் திரு. ஷாஜு சாக்கோ அவர்களது முகநூல் பக்கத்திலிருந்து ( https://www.facebook.com/groups/1671853019753122) அவரது அனுமதியுடன் இங்கே பதிவிடப்பட்டிருக்கிறது. குட்டிசாத்தான் பற்றிய இந்த தகவல்களை கதை போல் எழுதினாலும் நிறைய விஷயங்கள் உண்மையில் நடந்தவைகளே  என்று கூறுகிறார்.

Sunday, July 20, 2014

பழங்காலத்தில் வானத்தை துழாவிப் பார்க்கும் தொலைநோக்கிகள் இல்லை















பழங்காலத்தில் வானத்தை துழாவிப் பார்க்கும் தொலைநோக்கிகள் இல்லை.  அந்த கிரகத்துக்கு நேரில் அவர்கள் சென்றதற்கான எந்த தடயமும் இல்லை. ஆனாலும் பூமியில் இருந்து 5 கோடி கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவில் உள்ள ஒரு கிரகத்தை எப்படியோ எட்டிப் பார்த்து, அதன் தரைப் பகுதி முழுவதும் செந்நிறத்தால் ஆனது என்பதைக் கண்டுபிடித்து, அந்த கிரகத்துக்கு "செவ்வாய்" என்று அழகிய தமிழில் பெயர் சூட்டிய நமது பழங்கால வானசாஸ்திர அறிஞர்களின் திறனை வியந்து பாராட்டாமல் இருக்க முடியாது. இந்த அறிவை எல்லாம் இன்று மூட நம்பிக்கை என்று சொல்லுபவர்கள், அதையெல்லாம் எப்படி நமது முன்னோர்கள் ஆராய்ந்து கண்டுபிடித்தார்கள் என்று விளக்குவார்களா ???

புளிய மரங்கள் அழிக்கப்படுவதால் புளிக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை வரலாம்


சாலைகளை விரிவாக்கம் செய்யும்போது முதலில் அழிக்கப்படுவது அந்த சாலையின் இரு பக்கங்களிலும் உள்ள புளிய மரங்கள் தான்.  நான்கு வழிச் சாலைகளை அமைக்க வெட்டிய புளிய மரங்களுக்கு பதிலாக புதிய மரங்களை எங்குமே உடனடியாக வைக்கப்படுவதில்லை.  அப்படி வெட்டப்பட்ட மரங்களில் பெரும்பான்மையானவை புளிய மரங்களே. 


புளிய மரங்களின் எண்ணிக்கை குறைவதால், இனி வரும் காலத்தில் புளிக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை வரலாம். புளிய மரங்கள் ஒன்றும் இன்று வைத்து விட்டு நாளை பலன் அனுபவிக்கும் மர வகைகள் அல்ல. பலன் கிடைப்பதற்கு நீண்ட வருடங்கள் பிடிக்கும். வருங்காலத்தில் புளி இல்லாமல் சமையல் செய்யும் நிலை கூட வரலாம். புளிசாதம், புளிக் குழம்பு, வற்றல் குழம்பு, மீன் குழம்பு, புளித் துவையல், புளி ஊறுகாய் இதெல்லாம் இனிமேல் கனவாகப் போகிறது. ஆமாம்... பீசா, பர்கர், சமோசா, பரோட்டா, நூடுல்ஸ், இதற்கெல்லாம் புளி எதற்கு ???

இடம்: செஞ்சி - திருவண்ணாமலை நெடுஞ்சாலை, ஒரு வருடத்துக்கு முன்பு எடுக்கப்பட்ட படம்

இரவு நேரங்களில் நடக்கும் சாலை விபத்துகள்

















இரவு நேரங்களில்  நடக்கும் சாலை விபத்துகள் பெரும்பாலும் மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுவதாலேயே நடக்கின்றன. மது அருந்த போகும்போது நடந்தா போக முடியும்? மது அருந்திவிட்டு வீட்டுக்கு போகணும்னா பைக் வேணுமே? நடக்கும் விபத்துகளுக்கு உண்மையான காரணம் drunk & drive தான். உட்கார்ந்து சாவகாசமாக குடிக்க இடம் கிடைப்பதால் தான் நிறைய பேருக்கு குடிக்கவே தோன்றுகிறது. மதுக் கடைகளில் bar  இல்லையென்றால் இப்படிப்பட்ட விபத்துகளைக் குறைக்க முடியும். 

அது அரசாங்கமோ அல்லது தனியாரோ, யார் மதுக்கடைகளை திறந்தாலும், யாரையும் கையைப் பிடிச்சு உள்ளே வாங்க வாங்கன்னு கூப்பிடறதில்லை. நம்ம சொந்த பொறுப்புல, விருப்பப்பட்டு தான் அங்கே போறோம். நம்ம பாதுகாப்புக்கு நாம் தான் உத்திரவாதம். நமக்கு தான் இருக்கணும் பொறுப்பு. அதை விட்டுட்டு அரசாங்கம் டாஸ்மாக் திறந்திருக்கிறது, அதனால நான் போயி குடிப்பேன்னு சொல்றது எப்படி இருக்குன்னா... "அவனை நிறுத்த சொல்லு, நான் நிறுத்தறேன்னு"... சொல்றதுக்கு சமம். கடைசியில் வலியும் வேதனையும் யாருக்கு வரும்? இதை உணர்ந்தால் என்றென்றும் நலமே!

Saturday, July 19, 2014

ஈ-மெயில் முகவரி இல்லாமலேயே இந்தக் காலத்தில் இவ்வளவு முன்னேறிவிட்டீர்களா?



ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரையை  துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தான்.  தரையை துடைத்துக் காட்டச் சொன்னார்கள்.  நன்றாகத் துடைத்தான்.

அடுத்து சின்னதாய் ஒரு இண்டர்வியூ. கடைசியில் அவனிடம் தகவல் சொல்வதற்காக ஈமெயில் முகவரி கேட்டார்கள். "ஈ மெயிலா? எனக்கு ஈ மெயில் இண்டர்நெட்டெல்லாம் தெரியாதே" என்றான் துடைக்க வந்தவன்.

"கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு ஈ மெயில் முகவரி இல்லையா? ச்சே!"  என்று அவனை அனுப்பி விட்டார்கள்.

வேலை இல்லை என்றதும் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. கையில் 10 டாலர்கள் இருந்தன.  அதைக் கொண்டு மார்க்கெட்டில் வெங்காயம் வாங்கினான்.  பக்கத்து குடியிருப்புப் பகுதியில் கூவிக் கூவி விற்றான். 10 டாலர் லாபம் கிடத்தது. மீண்டும் வெங்காயம் வாங்கி மீண்டும் விற்பனை.  இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் விற்று சில வருடங்களில் பெரிய வெங்காய வியாபாரி ஆகிவிட்டார்.

இந்தச் சூழ்நிலையில் ஒரு புதிய வங்கிக் கணக்கு தொடங்குவது சம்பந்தமாக, ஒரு வங்கி ஊழியர் அவரிடம் பேச வந்திருந்தார்.  அவருடைய  ஈமெயில் முகவரி கேட்டார். வியாபாரி, "ஈமெயில் முகவரி இல்லை" என்று பதிலளிக்க, "ஈமெயில் இல்லாமலே இந்தக் காலத்தில் இவ்வளவு முன்னேறி விட்டீர்களா? உங்களுக்கு மட்டும் ஈமெயில், இண்டர்நெட்டெல்லாம் தெரிந்திருந்தால்…?" என்று ஆச்சர்யமாய்க் கேட்டார் வங்கி ஊழியர்.

"அதெல்லாம் தெரிந்திருந்தால் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரையை துடைத்துக் கொண்டிருப்பேன்" என்றார் வியாபாரி !!!

Wednesday, July 16, 2014

ஃபயர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் (Fire OS) மூலம் இயங்கக்கூடிய புதிய 3D மொபைல்















அமெரிக்காவின் பிரபல ஆன்லைன் வர்த்தக தளமான அமேசான்(Amazon) தற்போது புதியதாக  பல சிறப்பு  அம்சங்களுடன் கூடிய  மொபைல் ஃபோன் ஒன்றை வெளியிட்டுள்ளது.  "அமேசான் ஃபயர்" (Amazon Fire) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மொபைல் ஒரு 3D மொபைல் ஆகும். இந்த மொபைலில் பிரபலமான ஆண்ட்ராய்டு ஆப்ரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தப்படவில்லை என்பதுதான்  இதன் முக்கியமான சிறப்பம்சம். இது அமேசான் தயாரித்த "ஃபயர் ஆப்ரேட்டிங் சிஸ்டம்" (Fire OS) மூலம் இயங்கக்கூடியதாகும்.


இந்த மொபைலின் நான்கு மூலைகளிலும் நான்கு இன்ஃப்ராரெட் சென்சார்கள்  பொறுத்தப்பட்டுள்ளது.  இதன் மூலம் அனைத்து பார்கோட் , பாடல்கள் , நம்பர்கள் முதலிய அனைத்தையும் ஃஸ்கேன் செய்திட முடியும்.  அமேசான் நிறுவனத்தின் சிறப்பு சேவைகளான எஃஸ்ரே மற்றும் செகண்ட்  ஃஸ்கிரீன் ஆகிய சேவைகளும் இந்த மொபைலில் உள்ளது.  மேலும் ஏதாவது உணவுப் பொருட்களை அதன் முன் வைத்தால் அந்த உணவின் சத்து அளவை எவ்வளவு என்பதைக் காட்டும்.  இந்த மொபைலில் உள்ள டைனமிக் பர்ஸ்பெக்டிவ் (Dynamic Perspective) என்ற ஆப்ஷன் மூலம் உங்களது முகத்தை இந்த மொபைல் ஸ்கேன் செய்து கொள்ளும். பின்பு மொபைலை இடதுபுறம் அல்லது வலதுபுறம் எங்கு திருப்பினாலும் மொபைலின் டிஸ்பிளே உங்களை நோக்கியே நகரும்.


இந்த மொபைல் 4.7 இன்ச் திரை அகலம் கொண்ட 2.2 GHz ஸ்னேப் டிராகன் பிராஸஸர் மற்றும் 2GB ரேமுடன் இயங்கக்கூடியதாகும். பின்புற கேமரா 13 MP மற்றும் 2.1MP  முன்புற கேமராவுடன் இந்த மொபைல் வெளிவந்திருக்கிறது.  அமேசான் நிறுவனம் 32GB மற்றும் 64GBக்கு இன்பில்ட் மெமரியும் வித்தியாசம் கொண்ட இரண்டு மொபைல்களை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த மொபைலுக்கு அமேசான் நிறுவனம் அன்லிமிட்டெட் க்ளவுட் ஸ்டோரேஜையும் தருகின்றது. இதன் விலையை அமேசான் நிறுவனம் 32GB க்கு 200 அமெரிக்க டாலர்களும், 64GB க்கு 300 அமெரிக்க டாலர்களையும் நிர்ணயித்துள்ளது.  இது தற்போதைக்கு அமெரிக்காவில் மட்டுமே  வெளியிடப்பட்டுள்ளது.  இந்தியாவில் விரைவில் வெளியிடப்பட உள்ளது !!!

Tuesday, July 15, 2014

அந்த அற்புத மனிதரை பெற்ற தாயார் நீங்கள் தானா?

ஒரு சமயம் காமராஜரும் நேருவும் தென்மாவட்டத்தில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொள்ள காரில் விருதுநகர் வழியாக சென்று கொண்டு இருந்தனர். அப்போது ஒரு மூதாட்டி விருதுநகரில் ரோட்டின் ஓரமாக பொதுமக்களோடு நின்று அவர்கள் செல்வதை கவனித்துக் கொண்டிருந்தார்.  அப்போது நேரு தன் அருகே இருந்த காமராஜரிடம் அங்கே ரோட்டின் ஓரமாக நிற்கும் பெண்ணை பற்றி தெரியுமா? என்று கேட்டார். 


உடனே காமராஜர் அது என் தாய் தான் என்று கூறினார். உடனே நேரு காரை நிறுத்தச் சொல்லி வண்டியை ரிவர்சில் எடுக்கச் சொன்னார். கார் அந்த மூதாட்டி அருகே வந்ததும் காரில் இருந்து இறங்கி காமராஜரின் தாயாரின் (சிவகாமி அம்மாள்) கையை பிடித்து அந்த அற்புத மனிதரை பெற்ற தாயார் நீங்கள் தானா? என்று பாசத்துடன் கேட்டார். இதை அங்கு கூடி இருந்தவர்கள் கண்டு பரவசம் அடைந்து ஆனந்த கண்ணீர் வடித்தனர். இதைப்படிப்பவர்களுக்கு சற்று மனம் கனக்கவேண்டும். அந்த தன்னலமில்லா தலைவன் வாழ்ந்த மண்ணில் தானே நாமும் வாழ்கிறோம் ???

Monday, July 14, 2014

தில்லைச் சிற்றம்பலத்துக்கு மேற்கே இரண்டு காததூரத்தில் அலை கடல் போன்ற ஓர் ஏரி

தொண்டை நாட்டுக்கும் சோழ நாட்டுக்கும் இடையில் உள்ள திருமுனைப்பாடி நாட்டின் தென்பகுதியில், தில்லைச் சிற்றம்பலத்துக்கு மேற்கே இரண்டு காததூரத்தில், அலை கடல் போன்ற ஓர் ஏரி விரிந்து பரந்து கிடக்கிறது. அதற்கு வீரநாராயண ஏரி என்று பெயர். அது தெற்கு வடக்கில் ஒன்றரைக் காத நீளமும் கிழக்கு மேற்கில் அரைக் காத அகலமும் உள்ளது. காலப்போக்கில் அதன் பெயர் சிதைந்து இந்நாளில் ‘வீராணத்து ஏரி’ என்ற பெயரால் வழங்கி வருகிறது.

புது வெள்ளம் வந்து பாய்ந்து ஏரியில் நீர் நிரம்பித் ததும்பி நிற்கும் ஆடி ஆவணி மாதங்களில் வீரநாராயண ஏரியைப் பார்ப்பவர் எவரும் நம்முடைய பழந்தமிழ் நாட்டு முன்னோர்கள் தங்கள் காலத்தில் சாதித்த அரும்பெரும் காரியங்களைக் குறித்துப் பெருமிதமும் பெரு வியப்பும் கொள்ளாமலிருக்க முடியாது. நம் மூதாதையர்கள் தங்களுடைய நலனுக்கும் தங்கள் காலத்திய மக்களின் நலனுக்கும் உரிய காரியங்களை மட்டுமா செய்தார்கள்? தாய்த் திருநாட்டில் தங்களுக்குப் பிற்காலத்தில் வாழையடி வாழையாக வரப்போகும் ஆயிரங்கால சந்ததிகளுக்கும் நன்மை பயக்கும் மாபெரும் செயல்களை நிறைவேற்றி விட்டுப் போனார்கள் அல்லவா?

ஆடித் திங்கள் பதினெட்டாம் நாள் முன் மாலை நேரத்தில் அலை கடல் போல் விரிந்து பரந்திருந்த வீர நாராயண ஏரிக்கரை மீது ஒரு வாலிப வீரன் குதிரை ஏறிப் பிரயாணம் செய்து கொண்டிருந்தான். அவன் தமிழகத்து வீர சரித்திரத்தில் புகழ்பெற்ற வாணர் குலத்தைச் சேர்ந்தவன். வல்லவரையன் வந்தியத்தேவன் என்பது அவன் பெயர். நெடுந்தூரம் பிரயாணம் செய்து அலுத்துக்களைத்திருந்த அவனுடைய குதிரை மெள்ள மெள்ள நடந்து சென்று கொண்டிருந்தது. அதைப் பற்றி அந்த இளம் வீரன் கவலைப்படவில்லை. அகண்டமான அவன் வீர நாராயண ஏரியின் தோற்றம் அவன் உள்ளத்தை அவ்வளவாக வசீகரித்திருந்தது.

ஆடிப் பதினெட்டாம் பெருக்கன்று சோழநாட்டு நதிகளிலெல்லாம் வெள்ளம் இருகரையும்தொட்டுக் கொண்டு ஓடுவது வழக்கம். அந்த நதிகளிலிருந்து தண்ணீர் பெறும் ஏரிகளும் பூரணமாக நிரம்பிக் கரையின் உச்சியைத் தொட்டுக் கொண்டு அலைமோதிக் கொண்டிருப்பது வழக்கம். வட காவேரி என்று பக்தர்களாலும் கொள்ளிடம் என்று பொது மக்களாலும் வழங்கப்பட்ட நதியிலிருந்து வடவாற்றின் வழியாகத் தண்ணீர் வந்து வீர நாராயண ஏரியில் பாய்ந்து அதை ஒரு பொங்கும் கடலாக ஆக்கியிருந்தது.

அந்த ஏரியின் எழுபத்து நான்கு கணவாய்களின் வழியாகவும் தண்ணீர் குமுகுமுவென்று பாய்ந்து சுற்றுப் பக்கத்தில் நெடுந்தூரத்துக்கு நீர்வளத்தை அளித்துக் கொண்டிருந்தது. அந்த ஏரித் தண்ணீரைக் கொண்டு கண்ணுக்கெட்டிய தூரம் கழனிகளில் உழவும் விரை தௌியும் நடவும் நடந்து கொண்டிருந்தன. உழுது கொண்டிருந்த குடியானவர்களும் நடவு நட்டுக் கொண்டிருந்த குடியானப் பெண்களும் இனிய இசைகளில் குதூகலமாக அங்கங்கே பாடிக் கொண்டிருந்தார்கள். இதையெல்லாம் கேட்டுக் கொண்டு வந்தியத்தேவன் களைத்திருந்த குதிரையை விரட்டாமல் மெதுவாகவே போய்க் கொண்டிருந்தான். ஏரிக்கரை மீது ஏறியதிலிருந்து அந்த ஏரிக்கு எழுபத்துநாலு கணவாய்கள் உண்டு என்று சொல்லப்படுவது உண்மைதானா என்று அறிந்து கொள்ளும் நோக்கத்துடன் அவன் கணவாய்களை எண்ணிக் கொண்டே வந்தான்.ஏறக்குறைய ஒன்றரைக் காத தூரம் அவன் அந்த மாபெரும் ஏரிக்கரையோடு வந்த பிறகு எழுபது கணவாய்களை எண்ணியிருந்தான்.

ஆகா! இது எவ்வளவு பிரம்மாண்டமான ஏரி? எத்தனை நீளம்? எத்தனை அகலம்? தொண்டை நாட்டில் பல்லவப் பேரரசர்களின் காலத்தில் அமைத்த ஏரிகளையெல்லாம் இந்த ஏரிக்கு முன்னால் சிறிய குளங்குட்டைகள் என்றே சொல்லத் தோன்றும் அல்லவா? வட காவேரியில் வீணாகச் சென்று கடலில் விழும் தண்ணீரைப் பயன்படுத்துவதற்காக மதுரை கொண்ட பராந்தகரின் புதல்வர் இளவரசர் இராஜாதித்தர் இந்தக் கடல் போன்ற ஏரியை அமைக்க வேண்டுமென்று எண்ணினாரே? எண்ணி அதைச் செயலிலும் நிறைவேற்றினாரே? அவர் எப்பேர்ப்பட்ட அறிவாளியாயிருந்திருக்க வேண்டும்? வீர பௌருஷத்திலேத்தான் அவருக்கு இணை வேறு யார்? தக்கோலத்தில் நடந்த போரில் தாமே முன்னணியில் யானை மீது ஏறிச் சென்று போராடினார் அல்லவா? போராடிப் பகைவர்களின் வேலை மார்பிலே தாங்கிக் கொண்டு உயிர்நீத்தார் அல்லவா? அதனால் ‘யானை மேல் துஞ்சிய தேவர்’ எனப் பெயர்பெற்று வீர சொர்க்கம் அடைந்தார் அல்லவா?

இந்தச் சோழ குலத்து மன்னர்களே அதிசயமானவர்கள்தான்! அவர்கள் வீரத்தில் எப்படியோ, அப்படியே அறத்திலும் மிக்கவர்கள். அறத்தில் எப்படியோ அப்படியே தெய்வபக்தியில் சிறந்தவர்கள். அத்தகைய சோழ குல மன்னர்களுடன் நட்புரிமை கொள்ளும் பேறு தனக்குக் கிடைத்திருப்பது பற்றி நினைக்க நினைக்க வந்தியத்தேவனுடைய தோள்கள் பூரித்தன. மேற்குத் திசையிலிருந்து விர்ரென்று அடித்த காற்றினால் வீர நாராயண ஏரித் தண்ணீர் அலைமோதிக் கொண்டு கரையைத் தாக்கியதுபோல் அவனுடைய உள்ளமும் பெருமிதத்தினால் பொங்கித் ததும்பிற்று.
இப்படியெல்லாம் எண்ணிக் கொண்டு வீர நாராயண ஏரிக் கரையின் தென்கோடிக்கு வந்தியத்தேவன் வந்து சேர்ந்தான்.

அங்கே வட காவேரியிலிருந்து பிரிந்து வந்த வடவாறு, ஏரியில் வந்து சேரும் காட்சியைக் கண்டான். ஏரிக்கரையிலிருந்து சிறிது தூரம் வரையில் ஏரியின் உட்புறம் படுகையாக அமைந்திருந்தது. வெள்ளம் வந்து மோதும்போது கரைக்குச் சேதம் உண்டாகாமலிருக்கும் பொருட்டு அந்தப் படுகையில் கருவேல மரங்களையும் விளாமரங்களையும் நட்டு வளர்த்திருந்தார்கள். கரையோரமாக நாணல் அடர்த்தியாக வளர்ந்திருந்தது. தென்மேற்குத் திசையிலிருந்து இருபுறமும் மர வரிசையுடன் வடவாற்றின் வெள்ளம் வந்து ஏரியில் கலக்கும் காட்சி சற்றுத் தூரத்திலிருந்து பார்க்கும்போது அழகிய வர்ணக் கோலம் போட்டது போல் காணப்பட்டது.

# பொன்னியின் செல்வன்

Sunday, July 13, 2014

அரிசிலாற்றுக்குத் தென் கரையிலிருந்து பழையாறை நகரம்


ரிசிலாற்றுக்குத் தென் கரையில் நின்று அந்நகரைப் பார்ப்போம். அடடா! வெறும் நகரமா இது? தமிழ்த்தாயின் அழகிய நெற்றியில் தொங்கும் ஆபரணத்தைப் போல அல்லவா நெற்றிச் சுட்டியைப் போல அல்லவா திகழ்கிறது! நதிகளும் ஓடைகளும் தடாகங்களும் கழனிகளும் புதுநீர் நிறைந்து ததும்புகின்றன. அவற்றில் பல வர்ண மலர்கள் பூத்துத் திகழ்கின்றன. தென்னை மரங்களும் புன்னை மரங்களும் குளிர்ச்சியான பசுமையைப் பரப்புகின்றன. இவ்வளவுக்கும் இடையிடையே விண்முட்டும் மணி மாடமாளிகைகளின் பொற்கலசங்களும், கோயில் கோபுரங்களின் உச்சியில் உள்ள தங்க ஸ்தூபிகளும் ஒளிவீசுகின்றன.



அப்பப்பா! பழையாறை என்னும் இந்த ஒரு பெரும் நகரத்துக்குள்ளே எத்தனை சிறிய ஊர்கள்? நந்திபுர விண்ணகரம், திருச்சத்திமுற்றம், பட்டீச்சுரம், அரிச்சந்திரபுரம் முதலிய ஊர்களும் அந்த ஊர்களின் ஆலயங்களும் இந்தப் பழையாறை என்னும் சோழர் தலைநகரில் அடங்கியுள்ளன. பழையாறையின் நாலு திசைகளிலும் வடதளி, கீழ்த்தளி, மேற்றளி, தென்தளி என்னும் நாலு சிவனார் கோயில்கள் இருக்கின்றன. போர் வீரர்கள் குடியிருக்கும் ஆரியப் படை வீடு, புதுப்படை வீடு, மணப்படை வீடு, பம்பைப்படை வீடு ஆகிய நாலு வீரபுரிகள் காணப்படுகின்றன.இவ்வளவுக்கும் நடுநாயகமாகச் சோழ மாளிகை என்றால், ஒரே மாளிகையா? விஜயாலய சோழருக்கு முன்னால் இது ஒரு தனி மாளிகையாக இருந்தது. பிறகு ஒவ்வொரு அரசகுமாரனுக்கும் ஒவ்வொரு இளவரசிக்குமாகப் பழைய சோழ மாளிகையையொட்டிப் புதிய புதிய மாளிகைகள் எழுந்து நிற்கும் காட்சியைக் காண்பதற்கு ஆயிரம் கண்கள் வேண்டும். வர்ணிப்பதற்கோ பதினாயிரம் கவிஞர்களின் கற்பனாசக்தி போதாது. 



இருநூறு ஆண்டுகளுக்குப் பின்னால் வந்த சேக்கிழார் பெருமான், "தேரின் மேவிய செழுமணி வீதிகள் சிறந்து பாரில் நீடிய பெருமைசேர் பதி பழையாறை" என்று வர்ணித்தார் என்றால் , சுந்தர சோழரின் காலத்தில் இந்த நகர் எவ்வளவு கோலாகலமாக இருந்திருக்கும் என்று ஊகித்துக் கொள்ளலாம். எனினும் , நாம் முதன் முதலில் இந்தப் பழம்பெரும் பதிக்குச் செல்லும் சமயத்தில் அதைப் பூரண கோலாகலத் தோற்றத்துடன் கொடுத்து வைத்திருக்கவில்லை. சக்கரவர்த்தி நோய்ப்பட்டுத் தஞ்சை மாநகர் சென்ற பிறகு வெளிநாடுகளிலிருந்து சிற்றரசர்களும் இராஜ தூதர்களும் மந்திரிப் பிரதானிகளும் சேனாதிபதிகளும் இங்கு வருவது நின்று போயிற்று. அவர்களுடன் வழக்கமாக வரும் பரிவாரங்களின் கூட்டமும் குறைந்து விட்டது. 



நாலு படை வீடுகளிலும் வசித்த போர் வீரர்களில் பாதிப் பேர் இப்போது ஈழ நாட்டுப் போர்க்களங்களில் தமிழர் வீரத்தை நிலைநாட்டிக் கொண்டிருந்தார்கள். மற்றவர்களில் ஒரு பகுதியார் வடதிசை எல்லையிலும் இன்னொரு பகுதியினர் மதுரையிலும் இருந்தார்கள். எனவே , படைவீட்டுப் பகுதிகளில் இப்போது பெரும்பாலும் வயோதிகர்களும் பெண்மணிகளும் சிறுவர் சிறுமிகளுமே தஞ்சைக்குச் சென்று விட்டபடியால், நகரின் அப்பகுதியானது பூட்டப்பட்ட வீடுகளுடன் வெறிச்சென்று இருந்தது. இராஜாங்க காரியங்களை நடத்தி வந்த அமைச்சர்கள், சாமந்தகர்கள், அதிகாரிகள் அனைவரும் தத்தம் குடும்பத்தோடு தஞ்சைபுரிக்குச் சென்று விட்டார்கள். இப்படியெல்லாமிருந்த போதிலும் பழையாறை வீதிகளில் கூட்டத்துக்கும் கலகலப்புக்கும் குறைவில்லை!

# பொன்னியின் செல்வன்